Saturday, 14 October 2017

ஆணி வேர் !!!

நான் மரமென்று இருந்தால்
என்னில் பல நண்பர்கள் வந்து போகலாம் இலைகளாக !!!
என்னில் பல காதல்கள் வந்து போகலாம் பூக்ககளாக !!!
என்னால் ஒரு நல்ல சமுதாயம் உருவாகலாம் விதைகளாக !!!
என்னில் பலர் வந்து பயன் பெறலாம்
பறவைகள் மனிதர்கள் போல !!!
இவை அனைத்தும் எப்படி சாத்தியம்
ஆணி வேறாக நீ இல்லையெனில்
அம்மா !!!

- ஜெய்  சத்யா 

No comments:

Post a Comment