என் உலகம்.. என் எழுத்துக்கள்..
Saturday, 14 October 2017
வானத்தில் பிறை நிலவு
அழகே எனக்கு தெரியாமல் நீ
எப்போது நகம் வெட்டி வீசினாய்
வானத்தில் பிறை நிலவு
- ஜெய் சத்யா
ஒற்றை கால் தவம்
உன் கூந்தலில் ஒரு நாள்
இடம் பெறுவதற்க்காக
எந்தன் வீடு பூக்கள் எல்லாம்
ஒற்றை காலில் தவம் கிடக்குதடி
- ஜெய் சத்யா
புகழ்ச்சி விரும்பாத அழகி
உனக்கு புகழ்ச்சி பிடிக்காது என்பதற்காக
ஒவ்வொரு வருடமும் உலக அழகி
பட்டத்தினை விட்டு தருவதில்
என்னடி நியாயம் இருக்கிறது
- ஜெய் சத்யா
இலையுதிர் கால மரங்களுக்காக
நட்ட நடு வீதியிலே
ஆடைகளை துறந்துவிட்டு கொஞ்சமும் வெட்கமின்றி
நிர்வாணமாய் நிக்கிறன்றன
இலையுதிர் கால மரங்கள்
பான்சலிக்கு உடை கொடுத்த
கண்ணன் எங்கே சென்றான்
என்று கேட்கின்றன
இலையுதிர் கால மரங்கள்
- ஜெய் சத்யா
தங்கம் பூசியவள்
அழகே நீ என்ன பில் கேட்ஸனின் மகளா
இத்தனை விலையிலும் தங்கம் பூசி கொண்டு
வந்து இருக்குகிறாயே !!!
- ஜெய் சத்யா
தற்கொலை முயற்சி
அழகே
நீ பறிக்காமல் விட்ட மலர்களை பார்
உதிர்ந்து போயிருக்கின்றன
கேட்டேன்.. தற்கொலை முயற்சியாம்
நீ கிடைக்காததால் !!!
- ஜெய் சத்யா
பூக்களின் கண்ணீர்
நீ உந்தன் தோட்டத்தில்
ஏனடி ஒற்றை ரோஜாவை மட்டும் பறித்து சென்றாய்
நீ பறிக்காமல் விட்ட ரோஜா மலர்கள்
இரவு முழுவதும் அழுதழுது விட்ட
கண்ணீர் துளிகளை பார் !!!
பனித்துளியாய் !!!
- ஜெய் சத்யா
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)