நீ உந்தன் தோட்டத்தில்
ஏனடி ஒற்றை ரோஜாவை மட்டும் பறித்து சென்றாய்
நீ பறிக்காமல் விட்ட ரோஜா மலர்கள்
இரவு முழுவதும் அழுதழுது விட்ட
கண்ணீர் துளிகளை பார் !!!
பனித்துளியாய் !!!
கோலாரை விடுத்தது நீ குளிக்கும் கிணற்று நீரில்
தேடினால் தங்கம் கிடைத்தாலும் கிடைக்கும்
எனது சந்தேகம் எல்லாம்
தங்கம் இருப்பது நீ குளிக்கும் நீரிலே இல்லை
நீ குளித்த நீரிலா ??
நான் மரமென்று இருந்தால்
என்னில் பல நண்பர்கள் வந்து போகலாம் இலைகளாக !!!
என்னில் பல காதல்கள் வந்து போகலாம் பூக்ககளாக !!!
என்னால் ஒரு நல்ல சமுதாயம் உருவாகலாம் விதைகளாக !!!
என்னில் பலர் வந்து பயன் பெறலாம்
பறவைகள் மனிதர்கள் போல !!!
இவை அனைத்தும் எப்படி சாத்தியம்
ஆணி வேறாக நீ இல்லையெனில்
அம்மா !!!